Header Ads Widget

Main Menu Bar

test

பிரிக்கிற அடயாளங்கள பிச்சி எறிவோம்.

அது ஒரு திருவிழாக் கூட்டம். நான் என் நண்பனத்தேடிகிட்டு அதுக்குள்ள அலஞ்சுகிட்டிருந்தேன். அங்க இருந்த கோயில சுத்தி சுத்தி அவனத் தேடிப்பாத்த நான் கொஞ்ச நேரத்துக் கப்புறம் அந்த கோயிலுககுள்ள நொழஞ்சேன். அவன தேடிக்கிட்டிருந்த அவசரத்துல ஒரு விசயத்த கவனிக்க மறந்துட்டேன். அங்க எல்லாரும் சட்டை இல்லாம தலைல தலைப்பாகையோட இருந்தாங்க. அந்தக் கூட்டத்துக்கு மத்தியில நான் மட்டும் சட்டையோட அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டிருந்தேன். அந்த கூட்டத்துல ஒருத்தர் என்னைய நிறுத்தி "யார்ல நீ . . ? சட்டயப்போட்டுகிட்டு கோயிலுக்குள்ள வந்திருக்க . . ?" அப்படின்னு ஜாதியெல்லாம் சொல்லித் திட்டி அசிங்கப் படுத்தி கடைசில என் சட்டையக் களற்றி அத தலைப்பாகையா கட்ட வச்ச பிறகுதான் விட்டாரு. இது நடந்து சுமார் 10 வருசத்துக்கு மேல இருக்கும் அண்ணக்கி எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சி. எனக்கு அந்தக் கோயிலின் சம்பிரதாயங்கள் முழுசும் தெரியாது. என்னோட நண்பன் பிரபுவ தேடிக்கிட்டுதான் நான் அங்க போயிருந்தேன். அவங்க குடும்பத்தோட தான் முதல் முறையா அந்த ஊருக்கே போயிருந்தேன். ஆனா நான் முதல் முதலா சாதி சொல்லி அசிங்கப் படுத்தப் பட்டது அங்கதான்.

சுமார் 200 வருசங்களுக்கு முன்னால திரிவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கன்னியாக்குமரி மாவட்டத்துல தாழ்ந்த சாதியா கருதப்பட்ட 18 சாதிகள் மேலாடை அணிறதுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கு. ஆண்கள் தலைல தலைப்பாகையும் அணிய தடை இருந்துருக்கு. தலைப்பாகைங்கிறது அப்ப கிரீடத்துக்கு சமமா மதிக்கப் பட்டிருக்கு. அதுக்கான அடையாளங்கள "சேரன் பாண்டியன்" போன்ற சில படங்கள்ள கூட பாக்க முடியும். அதனால அத தலைல கட்டுற துணின்னு கருதாம அதன் மேல மத நம்பிக்கைகளயும், தங்களோட சுய அபிப்ராயங்களையும் ஏற்றிவச்சு அத பிற ஜாதியார் அணியத் தடை விதிச்சிருக்காங்க அந்தப்பகுதியின் ஆட்சியாளர்கள். அது போக மேலாடைங்கிறது ஆண், பெண் இருபாலருக்குமே தடைசெய்யப் பட்டிருக்கு. அதுலயும் ஒரு உயர் சதிக்காரர் முன்னால மேலாடை அணிஞ்சுக்கிட்டோ, அல்லது சேலையால மர்பகங்கள மூடிக்கிட்டோ வர்ற பெண்கள பகிரங்கமா மேலாடைய களையவச்சோ, அல்லது அதுக்கு மறுக்குறவங்கள தாங்களே வலுக்கட்டாயமா நீக்கியோ அனுப்பியிருக்காங்க சில உயர் ஜாதிக் காரங்க.

இந்தக் கொடுமைக்கு எதிரா அந்தக் காலகட்டத்துல தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டிருக்கு. அந்த சமயத்துல வாழ்ந்த வைகுண்டர்ங்கிற முத்து குட்டி "அய்யா வழி" ங்கிற மத அமைப்ப தொடங்கியிருக்காரு. தாழ்த சாதியா கருதப் பட்ட ஒரு சாதில அவர் பிறந்ததால அவரும் அந்தப் போராட்டத்துல பங்கெடுத்திருக்காரு. அவர் எழுதின அகிலத் திரட்டு நூல்ல கூட

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..." ன்னு குறிப்பிட்டிருக்காரு.

அப்ப தன்ன சந்திக்க வர்ற பெண்கள மார்பை மறைச்சு சேலை அணியச் சொன்ன அவர், தன்னோட மத கோட்பாட்டுல ஆண்கள் தலைப்பாகை அணியணுங்கிறதையும் நிர்பந்திச்சிருக்காரு. அவர் அண்ணக்கி செஞ்சது சாதிய அடக்கு முறைக்கு எதிரான போராட்டம். ஆனா தலைப்போகையெல்லாம் மலையேறி, இப்ப வித விதமான தெப்பிகளையும், வித்தியாசமான ஆடைகளையும், ஆணும் பெண்ணும் அணியிற காலத்துல, தலைப்பாகை கட்டிகிட்டுதான் வரணுன்னு நிர்பந்திக்கிறது சம்பிரதாய அடிப்படையிலான முட்டாள்தனம்.

அய்யா வழில அந்தக் கால கட்டத்துக்கான புரச்சிகரமான சில கருத்துகள் இருந்தாலும், அது ஒரு மத அமைப்புதான். அதுவும் இந்துமதமுன்னு சொல்லப்படக்கூடிய பிராமண மதத்தின் பல கூறுகள தன்னகத்தே கொண்டதுதான் அந்த அமைப்பு. நான் மேல சொன்ன வரிகள்ள கூட "சிவனே அய்யா . . ."ன்னு தான் பொலம்புறாறே தவிர அது ஒரு எழுச்சிப்பாடலா இல்ல.

அதனால சம்பிரதாயமான கடைபிடிப்புகள் அங்க இருந்தது ஆச்சரியப்படுறதுக்கான விசயமில்ல, ஆனா "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்ன்னு" சொல்லியிருக்கிற அய்யாவழியில தான், அதப் பின்பற்றுற ஒருத்தர் நான் தலைப்பாகை அணியாததுக்காக என்ன சாதி சொல்லி அசிங்கப் படுத்தினாரு. ஒரு செயல்பாடு, மதம் சார்ந்ததா இருந்துச்சுன்னா இப்படித்தான் அதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது தெரிந்தாலும் அதத் தாண்டி செயல்படுறதுக்கான மனப்பக்குவமில்லாமலோ விடாப்பிடியா பின்பற்றப் படுது.

மதங்கள் பொதுவாகவே சம்பிரதாய அடிப்படைலதான் இயங்குது. அதன் சடங்குகள், கடைபிடிப்புகள் காலத்துக்குப் பொறுந்துதான்னுல்லாம் அது பாக்கிறதில்ல. சிலநூறு வருசத்துக்கு முன்னால தோன்றின அயயா வழியே இப்படின்னா பல நுறு வருசங்களுக்கு முன்னால தோன்றின மதங்களின் கோட்பாடுகள் இண்ணைக்கும் பொறுந்துன்னு நாம எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அவற்றை மாத்தியமைக்கவோ, திருத்தவோ மதங்கள் பெரும்பாலும் அனுமதிக்கிறதில்ல. அதனாலதான் மதம்ன்னாலே மூடத்தனங்கள் நெறஞ்ச பழைய அமைப்புன்னு சொன்னாரு பெரியார்.

தொடர்ந்து செய்யப்படும் சடங்குகள் மற்றும் மதத்தோட இந்த கடைபிடிப்புகள் நாளாவட்டத்துல அர்தங்கள் இழந்து வெறும் அடயாளங்களா மாறிப்போகுது. நெத்தில பட்ட போடுறது, நாமம் போடுறது, தலைல குல்லா வக்கிறது, சில குறிப்பிட்ட வண்ணங்கள்ள ஆடை அணியிறதுன்னு இதுல பல வகை இருக்கு. இது எல்லாமே காரண காரியமே இல்லாமலோ, அல்லது தெரியாமலோ பின்பற்றப்படுது.

இது பூனக்குட்டி கத மாதிரிதான், இந்தக்கத பெரும்பாலோருக்குத் தெரிஞ்சிருக்குமுன்னு நெனக்கிறேன்,

முன்னொரு காலத்துல ஒருநாள் ஒரு குருகுலத்துல குரு தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கிட்டிருந்தாரு, அப்ப, ஒரு பூனக்குட்டி அங்குட்டும் இங்குட்டுமா துள்ளி விளையாண்டுக்குட்டிருந்திருக்கு. அங்க இருந்த சீடர்கள் பாடத்த கவனிக்காம அந்த பூனைய கவனிச்சிகிட்டிருந்தாங்க. அதப்பாத்த குரு ஒரு சீடன கூப்டு அந்தப் பூனைய பிடிச்சி பக்கத்தில இருந்த தூணுல கட்டச் சொல்லிஇருக்காரு. அப்புறம் பாடம் நடந்திருக்கு.

மறுநாள் பாடம் நடத்த வந்த குரு கொஞ்சம் உசாராகி பாடம் தொடங்குறதுக்கு முன்னாலயே ஒரு சீடன கூப்பிட்டு பூனக்குட்டிய தூணுல கட்டச் சொல்லி இருக்காரு. அப்புறம் எப்பலலாம் குரு பாடம் நடத்துறாரோ அப்பல்லாம் பூனக்குட்டி தூணுல கட்டப்பட்டிருக்கும்.

இப்படியே கொஞ்சகாலம் கழிஞ்சுது, ஒரு நாள் குரு இறந்து பொயிருதாரு. அதுக்கப்புறம் தலைமைச்சீடன் குரு வாகுறான் அவனும் பாடம் நடத்துறதுக்கு முன்னால பூனைய பிடிச்சி தூணுல கட்டி வக்கச் சொல்றான்.

ஒரு நாள் அந்தப் பூனையும் வயசாகி இறந்து போச்சு. பாடம் நடத்துறதுக்காக குரு, அதாவது முன்னாள் தலைமைச் சீடன் வர்றான், அங்க பாத்தா துணுல பூன இல்ல அதப்பாத்துட்டு அவன் ஆத்திறப்படுறான். "பாடம் நடத்தும்போது பூனைய தூணுல கட்டனுன்னு உங்களுக்குத் தெரியாது . . ?" அப்படின்னு தன் சீடர்களப்பாத்து கடுமையா திட்டுறான். பதறிப்போன சீடர்கள் எங்கெங்கொல்லாமோ அலஞ்சி ஒரு பூனைய பிடிச்சிட்டு வந்து தூணுல கட்டியிருக்காங்க. அதுக்கப்புறந்தான் பாடம் நடத்த ஆரம்பிச்சிருக்கான் அந்த புதிய குரு.

மதம் சார்நத சம்பிரதாயங்கள் எவ்வளவு முட்டாள் தனமானதுங்கிறத சுட்டிக்காட்டுது இந்தக் கதை.

ஆனா இந்த மாதிரி சம்பிரதாயமான கடைபிடிப்புகள் மதத்துல மட்டுந்தான் நடக்குன்னு சொல்ல முடியாது, சில நேரங்கள்ள நிர்வாக அமைப்புகள்ள கூட நாம ஆணியிற ஆடைகள் சம்பிரதாயமாக்கப் படலாம். உதாரணமா வக்கீல்கள் அணியிற கருப்பு அங்கி,

17ம் நூற்றாண்டுல இங்கிலாந்தை ஆண்ட 3ம் வில்லியம் மன்னன் தன் மனைவி இறந்த துக்கத்த அனுசரிக்கிறதுக்காக வக்கீல்கள கருப்பு அங்கி அணியச் சொல்லியிருகிறான். அதுக்கப்புறம் அத அவன் மாற்றச் சொல்லாத தால அது இங்கிலாந்தின் நீதிமன்றத்துல வழக்கமாகியிருக்குது. இங்கிலாந்தின் ஆட்சி நடந்த இந்தியால இண்ணக்கும் அந்த முறை தொடருது.

இப்ப நிறுவனங்கள் அணியச் சொல்லி நிர்பந்திக்கிற ஷூவும், டையும்கூட இதுமாதிரி வெள்ளைக்காரர்கள் டிரஸ்கோட்ங்ன்னு அவங்க ஊரு சூழலுக்கு ஏற்ப உருவாக்கிகிட்ட கடைபிடிப்புதான்.

சில வருசங்களுக்கு முன்னால நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல வேல பாத்தப்ப "வெள்ளக்காரன் சொன்னங்கிறதுக்காக வேத்துப்புளுங்குற நம்ம நாட்டுலயும் டைகட்டச் சொல்லி நிர்பந்திக்கிறது ஞாயமா . . "ன்னு என் மேலதிகாரிக்கிட்ட நேரடியாவே சண்ட போட்டுருக்கேன். ஒரு கட்டத்துல டைகட்டாதவங்களுக்கு 10 ரூபா பைன் வசூலிக்கிற நெலமையெல்லாம் இருந்துச்சு. ஒரு மேனேஜர் எப்வும் கைல ஒரு உண்டியல வச்சிக்கிட்டு டைகட்டாதவங்கக்கிட்ட பைன் வசூல் பண்ணிகிட்டிப்பாரு. கடைசியில பெருவாரியான நபர்கள் எதிர்த்ததால அது கைவிடப்பட்டுச்சு.

இத ஏன் இவ்வளவு வெவரமாச் சொல்றேன்னா நிர்வாக அமைப்புகளின் கடைபிடிப்புகளுக்கும், மதம் சார்ந்த சம்பிரதாயங்களுக்கும் நெறைய வேறுபாடு இருக்கு. நிர்வாக அமைப்புகளின் கடைபிடிப்புகள் நான் சொன்ன மாதிரி சிறு எதிர்ப்பு காட்டினாலே அதுல மாற்றம் நடந்துறும், இன்னொண்ணு அது பெரும்பாலும் காலத்துக் கேத்த மாதிரி மாற்றங்கள ஏற்படுத்திக்கிடவும் செய்யும். ஏன்னா அது உணர்வு ரீதியான கட்டுமானமில்ல. ஆனா மதம் சார்ந்த சடங்குகள், மற்றும் சம்பிரதாயங்கள் அப்படி இல்ல. அவை உணர்வுகளோஅழுத்தமா பிணைக்கப் பட்டிருக்கு. அதத் தாண்டி சிந்திக்கிறதே பாவமுன்னுதான் மதம் நம்மள பழக்கியிருக்கு. மிகச் சொற்பமா சில இடங்கள்ள சில மாற்றங்கள் நடந்தாலும் பெரும்பாலும் மதங்களும், அது சார்ந்த கடைபிடிப்புகளும் நான் மேல சொன் மாதிரிதான் இருக்குது.

இப்ப நான் வெல செஞ்சிக்கிட்டிருக்குற எடத்துல மதிய உணவ நெறைய பேர் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம். நான் வந்த புதுசுல சில நண்பர்கள் என்னோட உணவ எச்சின்னு பாக்காம சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போதே டக்குன்னு எடுத்து ருசிபாப்பாங்க. ஆரம்பத்துல எனக்கு அது கொஞ்சம் நெறுடலா இருந்துச்சு. அப்புறம் நான் பிறர் கொண்டு வந்திருக்குற குழம்பு, கூட்டுகள எடுத்துச் சாப்பிடுற அளவு மாறிக்கிட்டேன்.

ஆனா எங்க சாப்பாட்ட எந்தப்பாகுபாடும் பாக்காம உரிமையோட எடுத்துச் சாப்பிடுவாரு ஒரு நண்பர். அதப்பாத்து எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருந்துச்சு. ஏன்னா அவர் ஒரு ஐயர். சில நேரங்கள்ள அவரோட டீசட்டுக்கு வெளியில எட்டிப்பாக்குற பூணூலயும், அவர் மைலாப்பூர் பகுதில ரூமெடுத்து தங்கியிருக்குறதயும் வச்சு ஒரு வாறா யூகச்சுக்கிட்டேன். தவிர அவர் அசைவமும் சாப்பிட மாட்டார்.

ஒரு நாள் நானும் அவரும் டீக்கடைக்குப் போயிருந்தோம். டீ சொல்லியிருந்தோம் வர லேட்டானதால நான் அங்க பாட்டில்ல இருந்த ஒரு பட்டர் பிஸ்கட்ட எடுத்து சாப்பிட ஆரம்பிச்சேன். ஒடனே அவரு என் கைல பாதி கடிச்சபடி இருந்த பிஸ்கட்ல கொஞ்சம் பிச்சு சாப்பிட்டாரு. நான் உடனே சிரிச்சுக்கிட்டே சொன்னேன் "இது ஒரு புரட்சி". உடனே அவர் கேட்டாரு என்ன தலைவா சொல்றீங்க?" "இல்ல . . பிராமணர்கள் சாப்பிடுறத ஒரு கீழ் சாதிக்காரன் கண்ணாலயே பாக்கக் கூடதுன்னெல்லாம் சம்பிரதாயமிருந்திருக்கு. பெரியார் கடுமையான பிராமண எதிர்ப்பாளரா உருவாகுறதுக்கு காரணமான சம்பவங்கள்ள ஒண்ணு, அவர் ஒரு நாள் தன் வீீட்ல நடந்த விருந்துல பிராமணர்கள் சாப்பிடுறதப் பாத்துட்டாருன்னு அவங்க அப்பா அவர கடுமையா தண்டிச்சு அசிங்கப் படுத்தினதுதான்.

இது நடந்து சுமார் 100 வருசங்கள்தான் இருக்கும் ஆனா இண்ணக்கி ஒரு பிராமண சாதியச் சேர்ந்தவர் என் கைல இருந்து என் எச்சில பிச்சி சாப்பிடுறாருன்னா இது புரட்சி இல்லயா ? . . " அப்படின்னேன்.

என் மனசுல பட்டத அப்ப சொல்லிட்டேன். பிராமணர்கள்ள சிலர் பிற சாதிகளோட திருமண உறவெல்லாம் ஏற்படுத்திக்கிற இந்தக்காலத்துல, அதுவம் இந்த நகரத்துல இது ஒண்ணும் பெரிய விசயமில்லதான். ஆனா நான் சொன்னத அவர் எந்த விதத்துல புரிஞ்சுக்கிட்டாரு, என்ன நெனச்சாருன்னெல்லாம் எனக்குத் தெரியல.

இங்க மாற்றமே இல்லாத சில பகுதிகளும் இருக்கு. இதுமாதிரியான வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடந்துக்கிட்டிருக்குற சில இடங்களும் இருக்கு. ஆனாலும் அது ஒரு ஆழமான நெறுக்கமா, பாகுபாடில்லாத மாற்றமா இல்ல. அத அப்பப்ப ஆடைதாண்டி எட்டிப்பாக்குற அவரோட பூணூல்தான் எனக்கு அறிவுறுத்துச்சு.

இது என் மனசுல தோணினப்ப அத என் பேஸ்புக் பேஜ்ல இப்படி எழுதுனேன்

"உனது தட்டில் நானும்
எனது தட்டில் நீயும்
எடுத்துச் சாப்பிடு மளவுக்கு
நெறுங்கிவிட்டோம்
ஆனாலும் - உன்
டீசர்ட்டின் கழுத்தோரமாய்
எட்டிப்பார்க்கும் பூணூல்
என்னை அச்சுறுத்துகிறது"

நான் போட்டு சில நிமிசங்கள்ள அது அவரோட ஹோமுக்குப் போயிருச்சு, அத அவர் பாத்திட்டாரு. அப்புறம் அவர நான் பாத்தேன். அதப்பத்தி எதுவும் பேசுவாறுன்னு நெனச்சேன், ஆனா எதுவுமே பேசாம ஒரு புன்னகையோட போயிட்டாரு.


சமீபத்துல ஒருநாள் நான் பேஸ்புக்ல பதிஞ்சதப் பத்தி உங்க அபிப்ராயம் என்னன்னுஅவர்கிட்ட நானாகவே கேட்டேன்.

"இந்த அலுவலகத்துல யாரும் ஜாதி பாக்குறதில்ல, எங்க அப்பா அடிக்கடி மாற்றப்படுற அரசு வேலைல இருந்ததால நான் அக்ரகாரத்துல வளர்ற சூழல் இல்ல அதனால நானும் அதப் பாக்குறதில்ல. அதனாலதான் எல்லார் சாப்பாட்டுலயும் உரிமையோட எடுத்துச் சாப்பிடுறேன். ஒரு வேள நான் அக்ரகாரத்துல பொறந்து வளந்திருந்தா இப்படி இருப்பேனான்னு தெரியல. ஆனா நீங்க அத எழுதினதுக்கப்புறந்தான் நாம எடுத்துச் சாப்பிடுறது தப்போன்னு தோணுது." அப்படின்னாரு.

எனக்கு உண்மையிலயே ரொம்ப அதிர்சியா இருந்துச்சு. நாம எதும் தப்பாச்சொல்லிட்டமா? அந்த வார்த்தைகள்ள எதும் குற்றமிருக்குதான்னு யோசிச்சுப்பாத்தேன்.

நாம ஒரு நல்ல மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். ஆனா இப்பவும் நம்மளப் பிரிச்சுக்கிட்டிருக்கு அந்த கயிறு. அது ஒருத்தர் ஒடலப் பிரிக்கிற கயிரு இல்ல ரெண்டு இனங்களப் பிரிக்கிற கயிரு. அப்படிப்பட்ட அடயாளம் தேவைதானா? அப்டிங்கிற நோக்கத்துலதான் நான் அத எழுதியிருந்தேன்.

ஆனா அவர் சொன்ன பதில் நான் இன்னும் பின்னால வேண்ணா போயிக்கிடுதேன் ஆனா இந்தக் கயித்த அறுத்துட்டு முன்னால வர விரும்பல ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு. அப்பதான் எனக்கு ஒரு விசயம் புரிஞ்சுது இது ஒரு மனுசனோட உடல்ல கட்டியிருக்குற கயிறு இல்ல அது அவன் மூளயக் கட்டியிருக்குற கயிறு. அத அவ்வளவு சீக்கிறத்துல அவனால அறுத்தெறிய முடியாதுன்னு.

சடங்கு சம்பிரதாயங்கள் ரீதியான கடைபிடிப்புகள் இப்படிப்பட்டவைதான். காலத்தின் மாற்த்துக்கேற்ப அதத்தாண்டி சிந்திக்க முடியாத அளவுக்கு நம்மளோட மூளய இறுக்கமா கட்டிப்போட்டுருக்கு. ஆனா மாற்றம் தவிர்க்க முடியாதது.

என்ன அச்சுறுத்துன அந்தக்கயிறு எண்ணக்கி அத கட்டியிருக்குறவங்களுக்கு உறுத்துதோ அண்ணக்கிதான் இன்னும் நெறுக்கமான, இன்னும் சமத்துவமான ஒரு எல்கய நாம தொட முடியும். இது இந்த கயிறுக்கு மட்டுமில்ல நான் மேல சொன்ன அத்தனை மத அடயாளங்களுக்கும் பொறுந்தும்.

மாற்றத்த நோக்கி பயணிப்போம்.

பிரிக்கிற அடயாளங்கள பிச்சி எறிவோம். 
பிரிக்கிற அடயாளங்கள பிச்சி எறிவோம். பிரிக்கிற அடயாளங்கள பிச்சி எறிவோம். Reviewed by Sumankavi on 9:02 AM Rating: 5

10 comments:

  1. எப்படி சிலுவை டாலரும்,இஸ்லாமியருக்கு தொப்பியும் உள்ளதோ அது போலதானப்பா இதுவும்... நீ சொல்லும் நூலை அறுத்து விட்டால் மட்டும் நாட்டில் சகோதரத்துவம் பெருக்கெடுத்து ஓடிவிடுமா? மத அடையாளங்கள் தனிப்பட்ட விசயம் . அதற்கும் சமத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்? முதலில் உன் சிந்தனையில் ஒரு தெளிவு வர வேண்டும்...எதையுமே சாதி துவேசத்துடன் பார்ப்பவன் நூல் அணியாவிட்டாலும் பார்ப்பான். சொல்ல்ப்போனால் இன்று நூல் அணிந்தவனை விட அணியாதவன் தான் சாதியை பிடித்துக்கொண்டு தொங்குகிறான்.. அண்மைகால உதாரணம் தருமபுரி...தம்பி பார்ப்பானை திட்டுபவன் எல்லாம் பெரியார் ஆகிவிட முடியாது. அவருடைய சித்தாந்தம் வேறு...இன்றைக்கு அவர் இருந்தால் பிராமணனை விட்டு விட்டு தருமபுரி ,கிருஷ்ணகிரி ,மதுரை ,நெல்லை ஆட்களை ஒரு பிடி பிடிப்பார்.முதல் உதை உனக்கும் உண்டு... வெள்ளைத்தோலை கண்டு வெறுப்பதை விட்டு விட்டு அவனிடம் இருக்கும் வெற்றியை புரிந்து கொள்..கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை வெட்டி இல்லாத நண்பர்களுடன் டீ ,பில்டர் அடித்துக்கொண்டு தேவையில்லாமல் புழுங்காதே...நுரையீரல் கெட்டுப்போகும்...உதடு கறுத்துப்போகும்...பொழப்ப போய் பாருடா சின்னத்தம்பி!

    ReplyDelete
  2. எனது பதிவை வாசித்து பதில் எழுதியதற்காக நன்றி ரகுபதி.

    ஆனா இந்தப் பிதிவின் ஆரம்பத்துலயே

    \\தொடர்ந்து செய்யப்படும் சடங்குகள் மற்றும் மதத்தோட இந்த கடைபிடிப்புகள் நாளாவட்டத்துல அர்தங்கள் இழந்து வெறும் அடயாளங்களா மாறிப்போகுது. நெத்தில பட்ட போடுறது, நாமம் போடுறது, தலைல குல்லா வக்கிறது, சில குறிப்பிட்ட வண்ணங்கள்ள ஆடை அணியிறதுன்னு இதுல பல வகை இருக்கு. \\

    ன்னு எழுதியிருக்கேன். இந்த வரிகள உள்வாங்கிக்காமலயே நீங்க comment எழுதியிருப்பதுதான் வருத்தமா இருக்கு.

    பட்டபகல் பன்னிரெண்டு மணிக்கு பைக்குல லைட் போட்டுட்டுப் போறவன்ட பாஸ் லைட் எரியுதுன்னு அறிவுறுத்துற சின்ன முயற்சியப் போலதான் இந்தக் கட்டுரைகள். ஆனா என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தாண்டா இருப்போம்ங்கிற எண்ணம்தான் உங்கள பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்க வச்சிருக்குது. அதனாலதான் தர்மபுரி சம்பவம் உன் கண்ணுக்குத் தெரியலையான்னு நீங்க கேட்டிருக்கிறதா உணர்றேன்.

    நான் பிராமணர்களை விமர்சிக்கிறேன்னா, மத்தவங்கள ஆதரிக்கிறேன்னு அர்த்தமா? உங்க சிந்தனையிலேயே தெளிவு இல்லையே நீங்க எனக்கு புத்தி சொல்றது ரொம்ப வேடிக்கையா இருக்கு.
    ஜாதியையும் மதத்தையும் யார் தூக்கிப்பிடிச்சாலும் அதநான் எதிர்க்கத்தான் செய்வேன் அது வன்னியர்களா இருந்தாலும் சரி அன்னியர்களா இருந்தாலும் சரி. ஒருவேள பெரியார் இப்ப இருந்திருந்தாலும் அதத்தான் செஞ்சிருப்பாருன்னு நம்புறேன்.

    ஆனா ஜாதிய படிநிலைகள உருவாக்கி. அதுக்கு மதம் வழியா வெவ்வேறு மதிப்பீடுகளக்கொடுத்து இப்படித்தாண்டா கடவுளே நம்மளப் படச்சிருக்காருன்னு ஜதியத் தீய வெதச்சவர்களே பிராமணர்கள்தான். அந்தத் தீதான் இப்ப தர்மபுரியிலயும், நீங்க சொன்ன மத்த இடங்கள்ளயும் பத்தி எரிஞ்சுகிட்டிருக்கு. அதனால வெதச்சவன விட்டுட்டு அதக் காவல்காக்குறவன மட்டும் குதத்ம் சொல்றது அபத்தத்துலயும் பேரபத்தம். அதப்பெரியார் இண்ணக்கி இருந்தா ஆமோதிப்பாங்கிறது நீங்க இன்னும் பெரியார சரியாப் புரிஞ்சுக்கலங்கிறதத்தான் காட்டுது.

    ReplyDelete
  3. இன்னொண்ணு . . . பிராமணர்கள்ட கத்துக்கிடவேண்டியது நிறைய இருக்குன்னு சொல்லி இருக்கீங்க.

    பசுமை நெறஞ்ச மரங்கள்ள பச்சையாகவும், கருப்பான பாறைகள்ள கருப்பாவும் தேவைக்கேற்ப, இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நிறம் மாறிக்கிடணும்.
    ஆனா எந்தச்சூழல்லையும் தன் சுருண்ட வால நிமுத்திக்கவே கூடாது. சரியான சந்தர்பம் வாய்க்கும் போது தன்னோட நாக்க நீட்டி இரைய கவ்விக்கிடணும்.

    இந்த சர்வைவலுக்கான சித்தாந்தத்த நான் ஏன் பிராமணர்கள்ட இருந்து கத்துக்கிடணும் ? அத ஒரு பச்சோந்திக்கிட்ட இருந்தே கத்துக்கிடுவேனே !


    ReplyDelete
  4. தவிர நீங்க என்ன சூழல்ல பிறந்து வளர்ந்தவர்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் தமிழ்ல உள்ள அத்தன கெட்ட வார்த்தைகளையும் சரமாரியா பேசுற சூழல்ல பெறந்து வளர்ந்தவன். ஆனா இப்ப அதுக்கான சூழலும் இல்ல மனோநிலைலயும் கொஞ்சம் மாற்ற மடைஞ்சிருக்கேன்.

    ஒரு விசயத்த முடிஞ்ச அளவு எடுத்துச் சொல்லி புரியவைக்கிறதுக்கான வலுவான மீடியமான எழுத்துல நம்மளோட கோபத்தையும், தனிப்பட்ட அசிங்கங்களையும் வெளிப்படுத்தக் கூடாதுங்கிறதுலையும் உறுதியா இருக்கேன்.

    ஆனா
    \\ கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை வெட்டி இல்லாத நண்பர்களுடன் டீ ,பில்டர் அடித்துக்கொண்டு தேவையில்லாமல் புழுங்காதே...நுரையீரல் கெட்டுப்போகும்...உதடு கறுத்துப்போகும்...பொழப்ப போய் பாருடா சின்னத்தம்பி \\
    அப்படின்னு நீங்க சொல்லியிருக்கிறது என்னோட உறுதியையும் உடச்சிரும் போலிருக்கு.
    நான் எண்ணைக்காவது பில்டர் அடித்து நீங்க பாத்திருக்கீங்களா? நான் கிராமத்தில் வேலைவெட்டி இல்லாமல் இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது?.

    எழுத்துக்ள சரியாக் கையாளத் தெரியாத நீங்கல்லாம் மீடியால இருக்கிறீங்கங்கிறத நெனைக்கும் போது வேதனையா இருக்கு.

    ReplyDelete
  5. அன்புத்தம்பி...


    ஏதோ 1970 கள்ல பேசற ஜெயகாந்தன் லெவல் ல சுயமரியாதை கருத்துக்கள அள்ளிக்கொட்டியிருக்க..ஏற்கனவே பாரதிதாசன் ல தொடங்கி எத்தனையோ பேர் டார்ச் ஐ பிடித்து பார்த்துட்டாங்க.. தமிழன் , இப்பவும் மண்சோறு சாப்பிடுறான். பாம்பு புத்துக்கு பால் ஊத்துறான். நாக்குல அலகு குத்துறான். இதுக்கெல்லாம் காரணம் உயர்சாதி காரனா? சுதந்திரம் வாங்கி 65 வருடம் ஆயிடுச்சி.. எத்தனையோ அரசுகள் வந்து போயிருக்கு.. எவ்வளவோ டார்ச் அடிச்சாச்சி- அதாவது நிறைய இட ஒதுக்கீடு மூலமா கல்வி , வேலை வாய்ப்புல இடம் தந்தாச்சி..அப்பவும் மண் சோறு சாப்பிடுறத மாத்த முடியலியே.. வெந்த சோத்த சாப்பிட்டு ஓரமா போய்ட்டிருக்கிற பிராமணன ஏன் கரிச்சு கொட்டுற.. அவன் உன் வழிக்கு வந்தானா ? அவன் தாத்தாவுக்கும் தாத்தா கொண்டு வந்ததா நீ சொல்ற சாதிக்கு ,இன்னிக்கு பிறந்த புதிய தலைமுறை என்ன பண்ணூவான்?
    அப்புறம், பச்சோந்தி ந்னு சொல்ற. 1967 ல் இருந்து தமிழ்நாட்ட ஆண்டது , ஆளுவது திராவிட கூட்டம்தானே .. எவ்ளோ பச்சோந்தி தனம் பண்ணிட்டாங்க பதவிக்காக.. இன்னிக்கு பொழுது போகலன்னா டெசோ கூட்டம் போடுறரே அவரு ,2009 ல முள்ளி வாய்க்கால்ல நம்மோட இனம் கொடூரமா அழிஞ்ச போது டெல்லியில பேரம் பேசினாரே..அவர் யாரு? நாளைக்கு பதவிக்கு அவர கொண்டு வரதுக்கு ஒரு கூட்டம் காத்திருக்கே..அது யாரு? தன்மானக்கூட்டமா? இலங்கையில போர் நடந்தபோது “ போரில் அப்பாவிகள் இறப்பது சகஜம் ன்னு சொன்ன தலைவி பின்னாடி ஒரு கூட்டம் அலையுது,அவங்க கார் டயருக்கு குனிஞ்சி வணக்கம் வைக்குது.. இவங்கல்லாம் பச்சோந்தியா இல்ல சுயமரியாதை தொந்திகளா?

    என்னமோ பிராமணன் மட்டும்தான் பச்சோந்தி மாதிரி பேசுற.. தம்பி... பேண்ட மாட்டிட்டு ரோட்டுக்கு வந்துட்டா நம்ம ஒவ்வொருத்தரும் பச்சோந்திதான் .. அந்த அளவுக்கு நம்ம சமூகம், அரசியல் கெட்டு கெடக்கு.. ஆமா கெட்ட வார்த்தை அது இதுன்னு ஏதோ சொல்ற .. நம்மளவிட ரோட்டில போற பிச்சைக்காரன் , குவாட்டர் கோவிந்தன், இன்னும் பிரமாதமா கெட்ட வார்த்தை பேசுவான். என்னால உனக்கு ஐம்பது பக்கத்துக்கு பதில் தர முடியும். கை வலிக்குது.. ஆள விடு.. சும்ம தேவையில்லாம அந்த சாதி காரன் மேல வெறுப்ப கக்காத... அவன் வளர்ந்துட்டான் . அதுதான் உண்மை. நீங்கள்லாம் வலம்புரி ஜான் பாஷை ல சொன்னா குறை சொல்லியே குள்ள மாகி போனவங்க.. எப்ப உயர போற்?

    ReplyDelete
  6. தம்பி சுமன் , அது என்ன சாவி தயாரிப்பவன்? புரியவில்லை ... இங்கே இருக்கும் பூட்டுகள் எல்லாம் பூட்டிக்கொண்டிருதால் சாவிக்கும் வேலை உண்டு..சாவி தயாரிப்பவனுக்கும் வேலை உண்டு... துரதிருஷ்டவசமாக எல்லா பூட்டுகளும் திறந்து தொங்குகின்றன. தமிழன் சரக்கை ஏற்றி விட்டு போதையில் மல்லாந்து படுத்திருக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரியும் ,ஆனால் உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கிறான். நீ சாவியை வச்சிகிட்டு என்னயா பண்ணப்போற? இந்த நாட்டையே திருத்தி புரட்டி போடப்போவதாக சொன்ன அன்னா ஹசாரே கிழவர் டெல்லியில் குப்புற படுத்து தூங்குகிறார். அதனால உன் டார்ச்சை கிழே போட்டு விட்டு பொழப்ப பாரு.. இனிமேல் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் பத்தி பேசுனாதான் எடுபடும் ... சும்மா துரு பிடித்த மதவெறி ,இனவெறி மொழி வெறி இதெல்லாம் எடுபடாது.. டவுட் இருந்தா டாஸ்மாக் ல மாலை 6 மணிக்கு போய் பாரு..

    ReplyDelete
  7. //ஏதோ 1970 கள்ல பேசற ஜெயகாந்தன் லெவல் ல சுயமரியாதை கருத்துக்கள அள்ளிக்கொட்டியிருக்க..ஏற்கனவே பாரதிதாசன் ல தொடங்கி எத்தனையோ பேர் டார்ச் ஐ பிடித்து பார்த்துட்டாங்க.. தமிழன் , இப்பவும் மண்சோறு சாப்பிடுறான் //

    எத்தன டார்ச் அடிச்சாலும் நாங்க கண்ணத் தொறக்க மாட்டோமுடான்னு விடாப்பிடியா இருக்குற சமூகத்துன் ஒரு பிரிவினரின் குரல்ன்னுதான் உங்களோட இந்த வரிகளப்பாக்குறேன்.

    எனக்கு பிராமணர்கள் எதிரிகள் கிடையாது ஜாதியும். மதமும், முதல் எதிரிகள். இதுல 80 கள்ள அவர் சொன்னார் 70 கள்ள இவர் சொன்னார்ன்னு வரலாறெல்லாம் தெரியாது. நான் பார்த்த உலகத்துல ஜாதிய ஒடுக்கு முறை இருந்துச்சு இண்ணைக்கும் இருக்கு. அத எல்லா சமூகத்தாரும் தங்கள அறிஞ்சோ அறியாமலோ பின்பற்றுறாங்க. முடிஞ்ச அளவுக்குப் பரப்பவும் செய்றாங்க. அதுல பிராமண சாதியினரை வேறு எவறாலும் மிஞ்ச முடியாது.

     “ஸ்பிளண்டர் அய்யர்” அப்படின்னு ஒரு பைக்குக்குப் பேர் வைக்குறாங்க.

     “அன்னப்பிரஸ்ன்னம்” அப்படின்னா என்னன்னு நானும் எனக்குத் தெரிஞ்ச பலர் கிட்டயும் கேட்டுட்டேன் யாருக்குமே சரியா பதில் தெரியல. ஆனா ஹார்லிக்ஸ் விளம்பரத்தின்மூலமா தன்னோட பழக்கவழக்கத்த ஒட்டு மொத்த உலகத்துக்கும் பரப்பிகிட்டிருக்கரு ஏதோ ஒரு அல்லது சில பிராமணர்கள்.

     ஞாபக சக்தி இல்லாத ஒரு பையன் சரியா பாரதியார், மகாத்மா காந்தி, ராஜகோபாலாச்சாரியான்னு சொல்றதா ஒரு விளம்பரம் வருது. குலக்கல்வின்னு ஜாதிய அடுக்குமுறைய இன்னும் வலுப்படுத்த முயான்ற ராஜாஜி இருக்காரு அந்த லிஸ்டுல. ஆனா வேற எந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளும் அவங்க கண்ணுக்குத் தெரியாலையா ? அத எழுதினதுல அல்லது வெளிக் கொண்டு வந்ததுல ஒரு பிராமண மூளை இல்லன்னு நினைக்கிறீங்களா?

     ஒரு நகைக்கடை விளம்பரத்துல சுவாக, சுவாக ன்னு சொல்லி பரப்பப்படுறது என்ன? திராவிடமா? இல்ல மனித நேயமா?

     அட அத விடுங்க சார் இமானுவேல் சேகரன் ஜெயந்திய நிறுத்திவைக்கிறதும். தேவர் ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லி மால போடுறதும் பிராமணப் பிரதிநிதி இல்லாம வேற யாரு அண்ணே?
    (இதுல பெரிய வேடிக்கை என்னன்னா அந்த பிராமணப் பெண் தலைவியா இருக்குற கூட்டத்துக்கு பேரு அண்ண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நெலம இப்படி இருக்கும் போது திராவிடர்கள் ஆண்டார்கள்ங்கிறது எவ்வளவு பெரிய பொய்)

    இது எல்லாமே எதோ எதேச்சையா நடந்ததுன்னு சொல்றீங்களா?
    இதுக்குப் பின்னால ஜாதிய ஒடுக்கு முறையும் பிராமண சாதியின் ஆதிக்கமும் இல்லவே இல்லன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  8. அண்ணே பிராமணர்கள பச்சோந்திகள்ன்னு சொன்னதுக்காக உண்மையிலேயே நான் வருத்தப்படுறேன். ஏன்னா அந்த பச்சோந்தித் தனம் இண்ணக்கி பல சாதிள்டயும் இருக்கு. பல தனிநபர்கள்டயும் இருக்கு அப்படி இருக்க நான் ஒரு குறிப்பிட் வகுப்பினர மட்டும் சொன்னதுக்கு உங்களோட கமென்ட்ல இருந்த எக்காளமும். துளியும் அறியாத என்னைப் பற்றி தவறாகப் பேசிய திமிரும்தான்.

    ஆனா தன்ன சர்வைவலுக்கு ஏத்த மனிதர்களா வச்சுகிறதுல பிராமணர்கள மிஞ்ச இண்ணய சூழலில்ல வேறு ஜாதிக்கோ இனத்துக்கோ தகுதி இல்லன்னு தான் நான் சொல்லுவேன். அத அவங்க்கிட்ட இருந்து கத்துக்கிட்டாலும் சரி சர்வைவலுக்கு ஏற்ற மற்ற பிராணிகள்ட இருந்து கத்துகிட்டாலும் சரி அது வெறும் பிழைப்புக்கான வேலை மட்டும்தான்.

    இந்த கமெண்டுக்குப் பொருந்தாத பிராமண குலத்தில் பிறந்த நேர்மையான மனிதர்கள் என்னை மன்னிப்பார்களாக.

    ReplyDelete
  9. \\இந்த நாட்டையே திருத்தி புரட்டி போடப்போவதாக சொன்ன அன்னா ஹசாரே கிழவர் டெல்லியில் குப்புற படுத்து தூங்குகிறார் \\

    Sorry, சார், அன்னா ஹசாரேவுக்கு எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுலா இருந்து ஆதரவுக்கரம் நீட்டுனது சென்னைல குறிப்பா திருவான்மியூர் பகுதில இருந்து மட்டும் தான்னு நெனைக்கிறேன்.

    அன்னா ஹசாரே உண்மையிலேயே அண்ணைக்கு மீடியாவுக்கு தலைப்புச் செய்தி போடுறதுக்குத் தேவைப்பட்டார். மத்த படி எனக்கு அவரப்பத்தி ஒண்ணும் தெரியாது.

    அவர் தூங்கினா என்ன? முழிச்சா என்ன? என்னால முடிஞ்சத நான் செய்யத்தான் செய்வேன்.

    "இருள் பெரியதென்று தெரியும்
    ஆனாலும் என்னால்
    ஒளிராமல் இருக்கமுடியாது"

    இருளோடு யுத்தம் செய்து தோற்று அணையும் மெழுகுவர்த்தியப் பத்தின எனது கவிதை.

    அது இங்கயும் பொருந்துமுன்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  10. \\தமிழன் , இப்பவும் மண்சோறு சாப்பிடுறான். பாம்பு புத்துக்கு பால் ஊத்துறான். நாக்குல அலகு குத்துறான். இதுக்கெல்லாம் காரணம் உயர்சாதி காரனா\\

    இந்த மூடத்தனத்த உயர்சாதிக்காரன் செஞ்சாலும் தாழ்ந்த ஜாதி செஞ்சாலும் தப்புதான்.

    ஆனா காளியம்மன் கோயில்ல தீ மிதிக்கிறவனும், பெருமாள் கோயில்ல பெல்லடிக்கிறவனும், ஒரே மதத்தச் சேர்ந்த வங்கதான் அவங்க இந்துதான்னு வரலாற்றுப் பூர்வமா பல பக்கத்துக்கு ஜெயமோகன் விளக்க வேண்டிய அவசியமென்ன?

    இது மதமாற்றத்தைத் தடுத்து அவன தொடர்ந்து தீ மிதிக்கவும், மண்சோறு சாப்பிடவும் வைப்பதற்கான ஏற்பாடுதானே.

    அவன் மதம் மாறினால் உங்களுக்கென்ன ? தலையில் தேங்காய் உடைக்கிற அதிக பட்ச முட்டாள் தனத்திலிருந்து மாறி கர்த்தர் திரும்பவும் இந்த பூமிக்கு வருவார்ன்னு புலம்பும் குறைந்த பட்ச முட்டாள்தனத்துக்கு பரிணாம வளர்ச்சி அடையந்துவிட்டுப் போகிறான்.

    கிறிஸ்தவ மதமாற்றம் அதிகமாய் நடப்பதால்தானே பெருமாள் கோயிலுக்குள் இல்லை அது இருந்த தெருவுக்குள்ளேயே அனுமதிக்காத இனம் இன்று இந்துக்கள் என்று ஒன்று திரட்ட முயல்வதும். உங்களைப் போன்றோன்றோர் இப்படி ஒருபுறம் மண்சோறு சாப்பிடுபவனை நக்கலடிப்பதும் நடக்கிறது.

    மேலாடை அணிவதற்கே ஒரு சமூகத்தை அனுமதிக்காமல் அடவடித்தனம் செய்த பிராமணியமும் இன்ன பிற உயர் சாதிகளும் இன்று ஏன் இந்துக்கள் என்று ஒன்று திரட்ட முயல்கிறார்கள்.

    இதையெல்லாம் செய்பவன் பெரிய எழுத்தாளன்.

    நான் எதிர்த்து எழுதினால் தம்பி வேல வெட்டி இல்லாமல் உளறாதே, பிழைப்பைப் போய் பார் என்று எனக்கு அறிவுறை வேறு.

    அண்ணே ! உண்மையிலயே இந்தத் தம்பிமேல உங்களுக்கு இருக்குற பாசத்தப் பாத்து மெய்சிலுத்துப் போயிட்டேன்.

    ஜெயமோகனின் பதிவுக்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

    http://www.jeyamohan.in/?p=21656

    ReplyDelete

Follow us

Powered by Blogger.